.
அது ஒரு பௌத்த விஹாரம்.
அதனுள் மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று இருந்தது.
ஒரு வயோதிகத் துறவி அந்த விஹாரத்திற்கு உள்ளே வந்தார்.
அமைதியாக நெடுநேரம் தியானத்தில் லயித்திருந்தார்.
தியானம் முடிந்து அமைதியாக வெளியேறினார்.
இது தினந்தோறும் நிகழ்ந்தது.
விஹாரத்தின் தலைவர் இதனை வியப்புடன் கவனித்து வந்தார்.
அன்றும் வழக்கம்போல் துறவி வந்தார்... தியானத்தில் ஆழ்ந்தார்.
தியானம் முடிந்து கிளம்பும்போது மடத்தின் தலைவர் அவரிடம் கேட்டார்.
"அய்யா... நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சொன்னார்...?"
"அவர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்...!".
அடுத்த கேள்வியைக் கேட்டார் தலைவர்.
"அப்படியா? அதுசரி... அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்...?"
அந்த வயோதிகத் துறவி அமைதியாக பதில் சொன்னார்.
"நானும் எதுவும் சொல்ல மாட்டேன்.அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன்...!".
.
.
.
Monday, September 13, 2010
Wednesday, September 8, 2010
இளையராஜாவின் காதல்
மகதநாட்டு இளவரசன் மகேந்திரவர்மன் அம்புலிமாமாவில் வருவதுபோல் அப்படியொன்றும் அழகானவன் அல்ல.
லேசாய்க் கருப்பாய்,ஒடிசலாய்,முன்னால் வழியும் தொப்பையுமாய் பார்க்க ஒரு மாதிரித்தான் இருப்பான்.
உங்களுக்குப் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், அழகில் அவன் ஒரு 24ம் புலிகேசி.
அழகில் மட்டும்தான் அப்படி... மற்றபடி அவன் ஒரு சகலகலாவல்லவன்.
ஆயகலைகள் 64க்கும் அவன் கோனார் நோட்ஸ் போடும் அளவுக்கு வித்தைகள் கற்றவன்.
ஆனால், அது எதுவும் அவனுக்குத் திருமண விஷயத்தில் உதவுவதாய் இல்லை.
இளவரசிகள் எவளும் மகேந்திரவர்மனைக் காதலிப்பதற்கான அறியும் தெரியவில்லை, குறியும் தெரியவில்லை.
சுயம்வரங்களில் எல்லாம் இவன் இருக்கும் வரிசைக்குக்கூட இளவரசிகள் வர மறுத்தார்கள்.
வயது ஏறிக்கொண்டேபோக, மார்க்கெட்டில் விலைபோகாத முற்றின கத்திரிக்காயாகிப் போனான் மகேந்திரவர்மன்.
யாரோ சொன்ன யோசனையைக் கேட்டு 'தமிழ் மேட்ரிமோனி'யில் கூட பதிவு செய்திருந்தான்.
ஆனால், பலனென்னவோ பூஜ்யம்தான்.
ஆச்சு... வயது முப்பதைத் தாண்டி ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன.
'இளவரசிகள் வேண்டாம்... ஏதாவது பெண்ணாயிருந்தால் போதும்' என்ற நிலைக்கு வந்துவிட்டான் மகேந்திரவர்மன்.
மனம் நொந்துபோன மகேந்திரவர்மன் மனம்போன, கால்போன வழியில் போகும்போதுதான் கொற்றவையைப் பார்த்தான்.
கொற்றவை அழகின் திரு உருவம்...இளமைப் புயல்.
பார்த்தவுடன் மகேந்திரவர்மனைப் பற்றிக் கொண்டது காதல்.
வாழ்ந்தால் இவளோடுதான் என்று முடிவே செய்துவிட்டான்.
ஆனால், கொற்றவையோ எல்லாப் பெண்களையும்போல் தானே..?
அவள் கனவில் ஆர்யாவும், அல்லு அர்ஜுனும் இருக்க... அவள் இளவரசரின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.
காரணம்...
முதல்நாள், கலர் கருப்பு என்றாள்.
மறுநாள், உடல் ஒல்லி என்றாள்.
அடுத்தநாள், வயிறு தொப்பை என்றாள்.
காதலைச் சொல்லப் போனபோதெல்லாம் பதிலுக்கு காரணங்களே கிடைத்தது இளவரசனுக்கு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகேந்திரவர்மன் ஒருநாள் மொத்தமாய் உடைந்துவிட்டான்.
நேராய் கொற்றவையிடம் சென்று, அவள் காலின் அடியில் மண்டியிட்டு தனது கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, தலைகுனிந்து சொன்னான்.
"கொற்றவை.. என் காதலுக்கு முன் இந்த ராஜ்ஜியம்கூடத் தூசு. இந்தா... எல்லாவற்றையும் எடுத்துக் கொள். என் காதலை மட்டும் ஏற்றுக்கொள்...!".
தன் முன்னால் மண்டியிட்டு குனிந்திருக்கும் ராஜகுமாரனைப் பார்த்துச் சொன்னாள் கொற்றவை.
"கிரீடத்தைக் கழற்றியதும் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது... உன் உச்சந்தலையில் முடியே இல்லை.... லேசாய்ச் சொட்டை தெரிகிறது. எனவே...உன் காதலை ஏற்றுக் கொள்ளமுடியாது. யூ ஆர் ரிஜெக்டட்...!".
.
.
லேசாய்க் கருப்பாய்,ஒடிசலாய்,முன்னால் வழியும் தொப்பையுமாய் பார்க்க ஒரு மாதிரித்தான் இருப்பான்.
உங்களுக்குப் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், அழகில் அவன் ஒரு 24ம் புலிகேசி.
அழகில் மட்டும்தான் அப்படி... மற்றபடி அவன் ஒரு சகலகலாவல்லவன்.
ஆயகலைகள் 64க்கும் அவன் கோனார் நோட்ஸ் போடும் அளவுக்கு வித்தைகள் கற்றவன்.
ஆனால், அது எதுவும் அவனுக்குத் திருமண விஷயத்தில் உதவுவதாய் இல்லை.
இளவரசிகள் எவளும் மகேந்திரவர்மனைக் காதலிப்பதற்கான அறியும் தெரியவில்லை, குறியும் தெரியவில்லை.
சுயம்வரங்களில் எல்லாம் இவன் இருக்கும் வரிசைக்குக்கூட இளவரசிகள் வர மறுத்தார்கள்.
வயது ஏறிக்கொண்டேபோக, மார்க்கெட்டில் விலைபோகாத முற்றின கத்திரிக்காயாகிப் போனான் மகேந்திரவர்மன்.
யாரோ சொன்ன யோசனையைக் கேட்டு 'தமிழ் மேட்ரிமோனி'யில் கூட பதிவு செய்திருந்தான்.
ஆனால், பலனென்னவோ பூஜ்யம்தான்.
ஆச்சு... வயது முப்பதைத் தாண்டி ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன.
'இளவரசிகள் வேண்டாம்... ஏதாவது பெண்ணாயிருந்தால் போதும்' என்ற நிலைக்கு வந்துவிட்டான் மகேந்திரவர்மன்.
மனம் நொந்துபோன மகேந்திரவர்மன் மனம்போன, கால்போன வழியில் போகும்போதுதான் கொற்றவையைப் பார்த்தான்.
கொற்றவை அழகின் திரு உருவம்...இளமைப் புயல்.
பார்த்தவுடன் மகேந்திரவர்மனைப் பற்றிக் கொண்டது காதல்.
வாழ்ந்தால் இவளோடுதான் என்று முடிவே செய்துவிட்டான்.
ஆனால், கொற்றவையோ எல்லாப் பெண்களையும்போல் தானே..?
அவள் கனவில் ஆர்யாவும், அல்லு அர்ஜுனும் இருக்க... அவள் இளவரசரின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.
காரணம்...
முதல்நாள், கலர் கருப்பு என்றாள்.
மறுநாள், உடல் ஒல்லி என்றாள்.
அடுத்தநாள், வயிறு தொப்பை என்றாள்.
காதலைச் சொல்லப் போனபோதெல்லாம் பதிலுக்கு காரணங்களே கிடைத்தது இளவரசனுக்கு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகேந்திரவர்மன் ஒருநாள் மொத்தமாய் உடைந்துவிட்டான்.
நேராய் கொற்றவையிடம் சென்று, அவள் காலின் அடியில் மண்டியிட்டு தனது கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, தலைகுனிந்து சொன்னான்.
"கொற்றவை.. என் காதலுக்கு முன் இந்த ராஜ்ஜியம்கூடத் தூசு. இந்தா... எல்லாவற்றையும் எடுத்துக் கொள். என் காதலை மட்டும் ஏற்றுக்கொள்...!".
தன் முன்னால் மண்டியிட்டு குனிந்திருக்கும் ராஜகுமாரனைப் பார்த்துச் சொன்னாள் கொற்றவை.
"கிரீடத்தைக் கழற்றியதும் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது... உன் உச்சந்தலையில் முடியே இல்லை.... லேசாய்ச் சொட்டை தெரிகிறது. எனவே...உன் காதலை ஏற்றுக் கொள்ளமுடியாது. யூ ஆர் ரிஜெக்டட்...!".
.
.
Labels:
அல்லு அர்ஜுன்,
ஆர்யா,
இளவரசன்,
கிரீடம்,
கொற்றவை,
தமிழ் மேட்ரிமோனி,
ராஜ்ஜியம்
2
comments
Monday, September 6, 2010
நொந்தகுமாரன்
நந்தகுமாரன் ஒரு காலத்தில் பயங்கர ஃபைனான்சியர்.
இப்போ எல்லாம் போச்சு.
வாங்கியவன் எல்லாம் காணாமல் போவதும், போய் விசாரித்தால் எல்லோரும் தப்பான அட்ரஸ் கொடுத்திருப்பதும் தொடர்ந்து நடக்க நந்தகுமாரன் வாழ்வில் நொந்தகுமாரனாகிவிட்டான்.
செல்வம் போய், கையில் இருந்த காசுபணம் போய், கார் வீட்டையெல்லாம் பேங்க் ஜப்தி செய்ய நந்தகுமாரன் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.
குடும்பம் இல்லாதவர் என்பதால் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.
என்றாலும் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட்டம் ஆகிவிட்டது இப்போது.
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.
பணம் போச்சு, கௌரவம் போச்சு, மரியாதை, மதிப்பு, நண்பர்கள் என எல்லாமே போயாச்சு.
எல்லாம் போனாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே,
அது போகவேயில்லை... விடாமல் நந்தகுமாரனைத் துரத்தியது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நந்தகுமாரன், யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊரில் போய் பிச்சை எடுப்பது என முடிவு செய்தார்.
'எங்கே பிச்சை எடுக்கலாம்...' என கடவுள் முன்னால் திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தார்.
கோயில்,கடைத்தெரு,பஸ் ஸ்டான்ட் என ஏகப்பட்ட இடங்கள் எழுதிப் போட்டதில் "கோயில்" என சீட்டு கிடைத்தது.
மறுநாள் காலையிலேயே நந்தகுமாரன் கடவுளின் திருவுள்ளப்படி பக்கத்து ஊர்க் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டார்.
காலையிலிருந்தே பக்தர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்களேயொழிய, நந்தகுமாரன் தட்டில் விழுந்ததோ ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமான சில்லறைகளே.
பொழுது சாயும்வரை காத்திருந்தும் ஒரு இருபது ரூபாய்கூடச் சேரவில்லை.
நொந்துபோன நந்தகுமாரன், 'வேறு எங்கே உட்காரலாம்...' என்று பார்த்த போது... சற்று தூரத்தில் ஒரு வைன் ஷாப் கண்ணுக்குத் தெரிந்தது.
மாலை நேரம் ஆனதால், இப்போது அங்கே கொஞ்சம் நடமாட்டமும் அதிகமாயிருக்க... ஊருக்குக் கிளம்பும் முன் அங்கேயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்கலாம் என முடிவு செய்தார் நந்தகுமாரன்.
உள்ளே போனவர்கள் நல்ல போதையில் வெளியேவர, அவர்கள் கையிலிருந்து நந்தகுமாரன் தட்டில் ஐந்தும் பத்துமாய் ரூபாய் நோட்டுகளாய் விழ ஆரம்பித்தது.
தட்டு நிறைய நோட்டுகள் விழவிழ, நந்தகுமாரன் எதிரே தெரிந்த கோவில் கோபுரத்தைப் பார்த்துச் சொன்னார்.
"பகவானே... என்னிடம் பணம் வாங்கியவர்கள்தான் ஒரு அட்ரஸ் கொடுத்துவிட்டு இன்னொரு அட்ரஸில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா...?".
.
.
.
இப்போ எல்லாம் போச்சு.
வாங்கியவன் எல்லாம் காணாமல் போவதும், போய் விசாரித்தால் எல்லோரும் தப்பான அட்ரஸ் கொடுத்திருப்பதும் தொடர்ந்து நடக்க நந்தகுமாரன் வாழ்வில் நொந்தகுமாரனாகிவிட்டான்.
செல்வம் போய், கையில் இருந்த காசுபணம் போய், கார் வீட்டையெல்லாம் பேங்க் ஜப்தி செய்ய நந்தகுமாரன் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.
குடும்பம் இல்லாதவர் என்பதால் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.
என்றாலும் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட்டம் ஆகிவிட்டது இப்போது.
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.
பணம் போச்சு, கௌரவம் போச்சு, மரியாதை, மதிப்பு, நண்பர்கள் என எல்லாமே போயாச்சு.
எல்லாம் போனாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே,
அது போகவேயில்லை... விடாமல் நந்தகுமாரனைத் துரத்தியது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நந்தகுமாரன், யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊரில் போய் பிச்சை எடுப்பது என முடிவு செய்தார்.
'எங்கே பிச்சை எடுக்கலாம்...' என கடவுள் முன்னால் திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தார்.
கோயில்,கடைத்தெரு,பஸ் ஸ்டான்ட் என ஏகப்பட்ட இடங்கள் எழுதிப் போட்டதில் "கோயில்" என சீட்டு கிடைத்தது.
மறுநாள் காலையிலேயே நந்தகுமாரன் கடவுளின் திருவுள்ளப்படி பக்கத்து ஊர்க் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டார்.
காலையிலிருந்தே பக்தர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்களேயொழிய, நந்தகுமாரன் தட்டில் விழுந்ததோ ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமான சில்லறைகளே.
பொழுது சாயும்வரை காத்திருந்தும் ஒரு இருபது ரூபாய்கூடச் சேரவில்லை.
நொந்துபோன நந்தகுமாரன், 'வேறு எங்கே உட்காரலாம்...' என்று பார்த்த போது... சற்று தூரத்தில் ஒரு வைன் ஷாப் கண்ணுக்குத் தெரிந்தது.
மாலை நேரம் ஆனதால், இப்போது அங்கே கொஞ்சம் நடமாட்டமும் அதிகமாயிருக்க... ஊருக்குக் கிளம்பும் முன் அங்கேயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்கலாம் என முடிவு செய்தார் நந்தகுமாரன்.
உள்ளே போனவர்கள் நல்ல போதையில் வெளியேவர, அவர்கள் கையிலிருந்து நந்தகுமாரன் தட்டில் ஐந்தும் பத்துமாய் ரூபாய் நோட்டுகளாய் விழ ஆரம்பித்தது.
தட்டு நிறைய நோட்டுகள் விழவிழ, நந்தகுமாரன் எதிரே தெரிந்த கோவில் கோபுரத்தைப் பார்த்துச் சொன்னார்.
"பகவானே... என்னிடம் பணம் வாங்கியவர்கள்தான் ஒரு அட்ரஸ் கொடுத்துவிட்டு இன்னொரு அட்ரஸில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா...?".
.
.
.
Labels:
காசு,
கோவில்,
செல்வம்,
திருவுள்ளம்பகவான்,
நோட்டு,
பகவான்,
பணம்,
பிச்சை
8
comments
Thursday, September 2, 2010
கடவுளின் படம்
அது பள்ளியின் ட்ராயிங் வகுப்பு.
குழந்தைகளை அவர்கள் மனதுக்குப் பிடித்ததை வரையச் சொல்லிவிட்டு வகுப்பைச் சுற்றி வந்தார் ஆசிரியை.
குழந்தைகள் எல்லோரும் குனிந்து வேகவேகமாய் வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தவர், அந்தச் சிறுவன் வரைவதைப் பார்த்ததும் நின்றார்.
டேனி தன்னருகில் ஆசிரியை நிற்பதும் தெரியாமல் அக்கறையாய் வரைந்து கொண்டிருந்தான்.
அவன் கவனம் எல்லாம் படத்தின் மேலேயே இருந்தது.
டீச்சர் கேட்டார்.
"டேனி என்ன படம் வரைஞ்சுட்டு இருக்க...?".
டேனி கண்களை உயர்த்தாமல் பதில் சொன்னான்.
"கடவுளோட படம் டீச்சர்...!'.
டீச்சர் அவன் ஆர்வத்தைக் கவனித்தபடியே கேட்டார்.
"ஆனா, கடவுள் எப்படி இருப்பாருன்னு யாருக்கும் தெரியாதே...!".
டேனி மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னான்.
"இப்ப நான் வரைஞ்சு முடிச்சதும் தெரிஞ்சுடும் டீச்சர்...!'.
.
.
.
குழந்தைகளை அவர்கள் மனதுக்குப் பிடித்ததை வரையச் சொல்லிவிட்டு வகுப்பைச் சுற்றி வந்தார் ஆசிரியை.
குழந்தைகள் எல்லோரும் குனிந்து வேகவேகமாய் வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தவர், அந்தச் சிறுவன் வரைவதைப் பார்த்ததும் நின்றார்.
டேனி தன்னருகில் ஆசிரியை நிற்பதும் தெரியாமல் அக்கறையாய் வரைந்து கொண்டிருந்தான்.
அவன் கவனம் எல்லாம் படத்தின் மேலேயே இருந்தது.
டீச்சர் கேட்டார்.
"டேனி என்ன படம் வரைஞ்சுட்டு இருக்க...?".
டேனி கண்களை உயர்த்தாமல் பதில் சொன்னான்.
"கடவுளோட படம் டீச்சர்...!'.
டீச்சர் அவன் ஆர்வத்தைக் கவனித்தபடியே கேட்டார்.
"ஆனா, கடவுள் எப்படி இருப்பாருன்னு யாருக்கும் தெரியாதே...!".
டேனி மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னான்.
"இப்ப நான் வரைஞ்சு முடிச்சதும் தெரிஞ்சுடும் டீச்சர்...!'.
.
.
.
Wednesday, September 1, 2010
டேய் பட்டாபி
பட்டாபி இறந்த பத்தாவது நிமிடத்தில் சித்திரகுப்தன் எதிரில் நின்றான்.
சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார்.
"அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?".
பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான்.
"எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!".
சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?"
பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான்.
"ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!".
சித்திரகுப்தன் தொடர்ந்தார்.
"நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?".
பட்டாபி எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்.
"இல்லை... ஏனக்கு காதல்னாலே அறவே பிடிக்காது..!" .
சித்திரகுப்தன் பேரேடை புரட்டியபடியே அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"உனக்கு மிகப் பிடித்த நண்பர்கள் பெயரைச் சொல்லு...!"
"எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது..!".
சித்திரகுப்தன் வியப்புடன் பட்டாபியை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"வீட்டுல நாய், பூனைனு ஏதாவது வளர்த்திருக்கியா..?"
பட்டாபி அதற்கும் அதேபோல் ஒரு அலட்சிய பாவத்துடனேயே பதில் சொன்னான்.
"எனக்கு மிருகங்கள்னாலே அலர்ஜி... அதனால அப்படி எதுவும் வளர்க்கல..!"
பட்டாபி பதில் சொன்னதும் நெற்றியைச் சுருக்கியவாறே யோசித்த சித்திரகுப்தன் மெல்லச் கேட்டார்.
"தம்பி... நீ இறந்து ரொம்ப நாளாயிருக்கும் போலருக்கே. ஆனா, ரொம்ப லேட்டா வந்திருக்க...?".
.
.
.
சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார்.
"அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?".
பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான்.
"எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!".
சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?"
பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான்.
"ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!".
சித்திரகுப்தன் தொடர்ந்தார்.
"நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?".
பட்டாபி எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்.
"இல்லை... ஏனக்கு காதல்னாலே அறவே பிடிக்காது..!" .
சித்திரகுப்தன் பேரேடை புரட்டியபடியே அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"உனக்கு மிகப் பிடித்த நண்பர்கள் பெயரைச் சொல்லு...!"
"எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது..!".
சித்திரகுப்தன் வியப்புடன் பட்டாபியை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"வீட்டுல நாய், பூனைனு ஏதாவது வளர்த்திருக்கியா..?"
பட்டாபி அதற்கும் அதேபோல் ஒரு அலட்சிய பாவத்துடனேயே பதில் சொன்னான்.
"எனக்கு மிருகங்கள்னாலே அலர்ஜி... அதனால அப்படி எதுவும் வளர்க்கல..!"
பட்டாபி பதில் சொன்னதும் நெற்றியைச் சுருக்கியவாறே யோசித்த சித்திரகுப்தன் மெல்லச் கேட்டார்.
"தம்பி... நீ இறந்து ரொம்ப நாளாயிருக்கும் போலருக்கே. ஆனா, ரொம்ப லேட்டா வந்திருக்க...?".
.
.
.
Subscribe to:
Posts (Atom)