Showing posts with label பாம்பு. Show all posts
Showing posts with label பாம்பு. Show all posts

Tuesday, February 9, 2010

முதுகெலும்பு அற்ற மற்றும் ஓர் உயிரினம்


கொஞ்ச நாட்களுக்கு முன்பு காட்டில் ஒரு அநாதையான குட்டி முயலும் அதே போல் அநாதையான குட்டி பாம்பு ஒன்றும் வசித்து வந்தன. விதிவசமாய் இரண்டும் குருடும்கூட.

இவை இரண்டும் ஒரு நாள் இரை தேடிப் போகும் போது அந்த முயல் தவறி பாம்பின் மீது விழுந்துவிட்டது.

உடனே முயல் பாம்பிடம், "சாரிண்ணே... மன்னிச்சுக்கஙக. எனக்கு கண்ணு தெரியாது... தெரியாம உஙக மேல விழுந்துட்டேன்...".

"அதனால என்ன... பரவாயில்ல. எனக்கும்தான் கண்ணு தெரியாது. ஆமா... நீங்க யாரு? கரடியா, புலியா, சிறுத்தையா..?" என்று கேட்க, முயல், "எனக்கு அப்பா அம்மா இல்லியா... அதனால நான் யாருன்னு எனக்கே தெரியாது..!" என்றது.

"எனக்கும் அப்படித்தான்... ஒண்ணு பண்ணுவமா, நம்ம யாருன்னு நாமளே கண்டுபிடிச்சுக்குவமா..!".

முயலும் "ஓகே.." சொல்ல பாம்பு முயலின் மேல் ஏறியது.

மெல்ல முயலின் உடலெல்லாம் சுற்றிய பிறகு, " உன் உடல் மென்மையான பஞ்சு போன்ற முடியால் மூடப்பட்டுள்ளது. காதுகள் நீளமாய் உள்ளது. உருண்டையான மூக்கு. சின்ன வால்... நான் கேள்விப்பட்ட வரை நீ முயல் என்றே நினைக்கிறேன்..." என்றது.

"நன்றி..நன்றி..." சந்தோசத்தில் கூவிய முயல் இப்போது பாம்பின் உடலைத் தடவிப் பார்த்துச் சொன்னது.

" உன் உடல் திடமற்றும் எளிதில் வளைந்து கொடுக்கக்கூடியதாயும் உள்ளது. உன் தோல் வழுவழுவென்றும் எளிதில் நழுவக் கூடியதாயும் உள்ளது. உடலெங்கும் அடி வாங்கிய காயங்கள் உள்ளன. உலகமெங்கும் உன்னை அடித்திருப்பார்கள் போலிருக்கிறது. உனக்கு நாக்கு இரட்டையாய் உள்ளது. முதுகெலும்பே இல்லை. எனக்கென்னவோ நீ தமிழனாய் இருப்பாய் என்று தோன்றுகிறது..!" .