Showing posts with label ஜென்மம். Show all posts
Showing posts with label ஜென்மம். Show all posts

Saturday, February 19, 2011

போன ஜென்மத்து ஞாபகம்

தில்லுதுர தன் வீட்டு வாசலில் உட்கார்ந்தபடி தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"கொஞ்சநாளா வேலை டென்ஷன்ல எல்லாமே மறந்து போகுதுன்னு சொன்னேனே. அதுக்கு ஒரு டாக்டரைப் போயி பார்த்தேன். அவரு அதுக்கு ஒரு மாத்திரைய ப்ரிஸ்கிரைப் பண்ணினாரு. இட்ஸ் ஜஸ்ட் அமேஜிங். நீங்க அந்த மாத்திரையை சாப்பிட்டுப் பார்க்கணுமே. அட்டகாசம்... எனக்கு இப்ப போன ஜென்மத்து ஞாபகம் எல்லாம் வந்துடும் போல இருக்கு...!".

சொல்லிக் கொண்டே சிரித்தார் தில்லுதுர.

கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஆச்சர்யப்பட்டு, "அந்த மாத்திரையோட பேரு என்ன்னு சொல்லறியா..? கொஞ்சம் உபயோகமா இருக்கும்...!".

நண்பர் கேட்டதும் தில்லுதுர யோசித்தபடி சொல்ல ஆரம்பித்தார்.

"அ... அது வந்து... இரு சொல்லறேன்...! இந்த ஒரு பூ இருக்குமே. சிகப்பு கலர்ல. சின்னச் சின்னதா அழகா. செடில முள்ளு எல்லாம் இருக்குமே. பறிச்சா கையில கூடக் குத்தும். நேரு சட்டைல வச்சிருப்பாரே..!".

யோசனையாய் தில்லுதுர சொல்வதைப் பார்த்த நண்பர் குழப்பத்துடன் கேட்டார்.

"எது... ரோஜாப் பூவையா கேக்கற..?".

நண்பர் சொன்னதும் பிரகாசமான தில்லுதுர, "கரெக்ட்.. ரோஜாதான்...!" என்றபடி வீட்டின் உள்பக்கமாய் திரும்பி மனைவியைப் பார்த்துக் கத்தினார்.

"ஏண்டி ரோஜா.. அந்த மாத்திரையோட பேரு என்னடி..?".
.
.
.