Showing posts with label கூத்தாடி. Show all posts
Showing posts with label கூத்தாடி. Show all posts

Friday, August 20, 2010

தில்லுதுரயும் தீவிரவாதியும்

ஒரு ஹிந்திக்காரன், நம்ம தில்லுதுர, ஒரு மலையாளி மூவரும் ஒரு பயங்கரத் தீவிரவாத கும்பலிடம் மாட்டிக்கிட்டாங்க.

தீவிரவாதியின் தலைவனோ, அவனோட கோரிக்கைகள் எதுவும் சரியாகததால இவங்க மூணு பேரையும் கொல்லற முடிவுல இருந்தான்.

இவங்களும் ரொம்பக் கெஞ்சிக்கூத்தாடிப் பாத்துட்டாங்க.

அவன் ஒண்ணும் மசியறதாத் தெரியல.

கடைசியா அவன் சொல்லியும் சொல்லிட்டான்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க மூணூ பேரையும் கொல்லப் போறேன். உங்களோட கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுங்க. முடிஞ்சா நிறைவேத்தி வைக்கிறேன்...!'.

அந்த ஹிந்திக்காரன் சொன்னான்.

"அய்யா... நான் எதுவும் சொல்ல விரும்பலை. கொல்லும்போது கொஞ்சம் வலியில்லாம சட்டுனு கொன்னுடுங்க...!'.

"ஓகே...!' என்ற தீவிரவாதித் தலைவன் தில்லுதுர பக்கம் திரும்பினான்.

"சொல்லு... உன்னோட கடைசி ஆசை என்ன..?".

'கடைசி காலத்தில் நாம் பயந்து செத்ததாக வரலாறு சொல்லிவிடக் கூடாது...' என்று யோசித்த தில்லுதுர,"எனக்கு ஒரு ஐந்து நிமிடம் பேச அனுமதி கொடுங்கள். நான் எங்கள் தமிழரின் வீரம், தமிழரின் ஒற்றுமை, தமிழின் பெருமை பற்றிப் பேச விரும்புகிறேன். அதுவே எனது கடைசி உரையாய் இருக்கணும்னு விரும்பறேன்...!" என்றான்.

"சரி...!' என்ற தீவிரவாதித் தலைவன் அந்த மலையாளியிடம் திரும்பினான்.

"உன்னோட கடைசி ஆசை என்ன..?'.

ஏற்கனவே மிரண்டு போயிருந்த மலையாளி... இன்னும் அதிக மிரட்சியோடு சொன்னான்.

"தயவுசெய்து அவன் பேசறதுக்கு முன்னாடி என்னைக் கொன்னுடுங்க...!'.
.
.
.