ஞாயிற்றுக்கிழமை என்பதால்... நண்பரைப் பார்க்க அன்று அவரது ரூமுக்கு வந்திருந்தார் தில்லுதுர.
அவரோ அப்போதுதான் எழுந்திருந்தார் போலும்.
தில்லுதுரயைப் பார்த்ததும், "வாடா... நாயர்கடைல ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம்.!" என்று தில்லுதுரயையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
தெருமுனையிலேயே இருந்தது நாயர்கடை.
வாசலில் இருந்த பெஞ்சில் கிடந்த பேப்பரை எடுத்தபடியே உட்கார்ந்த தில்லுதுரயின் நண்பர், " நாயர் எனக்கொரு டீ.!" என்றவர் தில்லுதுரயின் பக்கம் திரும்பி, "உனக்கென்னடா வேணும்.... டீயா காஃபியா.?" என்றார்.
தெருமுனைக் கடையின் சுத்தத்தில் அவ்வளவாய் திருப்தியில்லாமல் அசுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுர நாயரிடமே திரும்பி, "எனக்கும் டீயே போட்ருங்க..!" என்றவர் தொடர்ந்து, "அப்டியே... கொஞ்சம் டம்ளரைக் கழுவிப் போட்ருங்க நாயரே.!" என்றபடி தானும் ஒரு பேப்பரை எடுத்து புரட்டலானார்.
ஒன்றுமே பேசாமல் டீயைப் போட ஆரம்பித்த நாயர், ரெண்டொரு பக்கம் தலைப்புகளை மேய்வதற்குள்ளேயே இரண்டு டம்ளர்களுடன் அவர்களிடம் வந்தவர் கேட்டார்.
"தம்பி... இதோ நீங்க ஆர்டர் பண்ண டீ. இதுல யாரு கழுவின டம்ளர்ல கேட்டது.?".
.
.
.
2 comments:
ஐயோ கடவுளே!! :-))))))))))
amas32
டி குடிக்கும் முன் யோசிக்க வேன்டும் போல
Post a Comment