Tuesday, March 13, 2012

தில்லுதுர கிஸ் மீ

நான் அன்னிக்கு லீவுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தேன்.

வீட்ல மதிய சாப்பாடு முடிந்து ஒரு சின்னத் தூக்கத்துக்கு அப்புறம், சாயங்காலம் காலாற ஒரு சின்ன வாக்கிங் போய்க் கொண்டிருந்த நேரம்.

"தில்லுதுர ஏழாம் நம்பர் மரத்தடில தோண்டு..!"னு ஒரு குரல் கேட்டது.

சுத்தியும் பார்த்தா யாரும் இல்ல."தில்லுதுர ஏழாம் நம்பர் மரத்தடில தோண்டு..!"னு மறுபடி அதே குரல் கேட்க, கவனிச்சுப் பார்த்தா அந்த மரத்தடியில பச்சைநிறத்தில் மின்னிக்கிட்டு ஒரு தவளை மட்டும் தெரிந்தது.

சந்தேகத்துடன் அந்தத் தவளையைப் பார்த்துக் கேட்டேன்.

"நீயா பேசின.?".

"ஆமா, பேசாத.... அந்த மரத்தடில தோண்டு..!".

சரி... என்னதான் நடக்குதுனு பக்கத்துல கிடந்த கம்பிய எடுத்து, அந்த தவளை சொன்ன எடத்துல தோண்டினேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க.... முழுசா ஒரு பெரிய தங்கக் காசு.

நம்பமுடியாம நான் அந்தத் தவளையப் பார்க்க... அது,"தில்லுதுர... இப்ப பத்தாவது மரத்தடியில தோண்டு...!" அப்டினுச்சு.

இப்ப சந்தேகமே இல்லாம அந்தக் கம்பியத் தூக்கிட்டுப் போயி, பத்தாம் நம்பர் மரத்தடில வேக வேகமாய்த் தோண்டினேன்.

இப்ப அப்படியே முள்ளங்கிப் பத்தையாட்டமா, அஞ்சு பெரிய பெரிய தங்கக் காசு.

மெரண்டு போயிட்டேன்.

இப்ப அந்தத் தவளையைத் தூக்கி கையில வச்சுக்கிட்டு கேட்டேன்.

"அடுத்தது என்ன..?"தவளை இப்ப சொல்லுச்சு,"தில்லுதுர... இப்ப கேரளா போ..!".

நானும் உடனே அதேபோல கேரளா வந்துட்டேன்.

தவளை சொல்லுச்சு,"தில்லுதுர... இப்ப கஞ்சன் ஜங்கா பத்துகோடி சூப்பர் பம்பர் லாட்டரி, இன்னிக்கு குலுக்கல்.!".

நானும் அதேபோல கஞ்சன் ஜங்கா பத்துக் கோடி லாட்டரி நேத்திக்கு குலுக்கல் லாட்டரி வாங்கினேன்.

அடிச்சதுடா... மொத ப்ரைஸு பத்துக் கோடி..!

எனக்கு என்ன பண்றதுனே தெரியல. மொதல்ல பாடாவதி ஹோட்டலை மாத்தி ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தேன்.

ஒரே நாள்ல நான் கோடீஸ்வரன். கையில பத்துக்கோடி... நம்பவே முடியல.!

சந்தோசத்தோட அந்த தவளையப் பாத்துக் கேட்டேன்.

"வாழ்க்கைலயே நான் பாக்க முடியாத பணத்த ஒரே நாள்ல சம்பாதிச்சுக் கொடுத்துட்ட. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல...!"னு சொன்னதும் தவளை சொன்னது.

"தில்லுதுர கிஸ் மீ...!".

நான் கொஞ்சம் கூட யோசிக்கல. ஒருநாள்ல பத்து கோடி சம்பாதிச்சுக் கொடுத்த தவளை... அதை முத்தமிட்டால் என்ன தவறு.?

அந்த தவளையை கையிலெடுத்து ஆசையாய் ஒரு முத்தம் கொடுத்தேன்.

என்ன ஆச்சர்யம்... அந்தத் தவளை அப்படியே ஒரு அழகான மனதை மயக்கும் 20வயசுப் பொண்ணா மாறிடுச்சு.

சொல்லிக் கொண்டே வந்த தில்லுதுர, கொஞ்சம் நிறுத்தி கரகரவென்ற தொண்டையை சரி செய்து கொண்டு தொடர்ந்தார்.

"இப்படித்தான் யுவர் ஆனர் அந்தப் பொண்ணு என் ரூமுக்குள்ள வந்தா. அப்பப் பாத்து போலீஸ் வந்துடுச்சு.!"
.
.
.

5 comments:

HOTLINKSIN.COM திரட்டி said...

ஹ ஹ ஹ ஹ..... க்ளைமேக்ஸ் செம சூப்பர் காமெடி...
உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

maithriim said...

Your stories always bring a smile to my face :) Well done!
amas32

sutha said...

ஹா ஹா - செம கற்பனை ... @ஸ்வீட்சுதா1

jeganjeeva said...

ஹா ஹா! சூப்பர் பீனிஷிங்க்!

தாய்மனம் said...

அசத்திடிங்க சூப்பர் கற்பனை

தொடருங்க இது போன்ற நகைசுவை கதைகளை

Post a Comment