Friday, February 24, 2012

தில்லுதுர இன் டாஸ்மாக் பார்

ஒரு வெள்ளிக்கிழமையின் சாயங்காலம் முடிந்த நேரத்தில் டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த தில்லுதுர, மங்கலான வெளிச்சத்தில் ஒரு ஆளில்லாத டேபிளைத் தேடி அமர்ந்தார்.

அமர்ந்ததும் அவசர அவசரமாய் அங்கும் இங்கும் பரபரப்புடன் பார்த்த அவர், அட்டென்டரை வேகமாய்க் கையை ஆட்டி அழைத்தார்.

பக்கம் வந்த அட்டென்டர் ஆர்டரைக் கேட்பதற்குள், "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள... ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

குழப்பத்துடன் அவரைப் பார்த்த அட்டென்டர், தில்லுதுர கேட்டதை கொண்டு வந்து கொடுத்தார்.

சரக்கு வந்ததும் கொஞ்சம் அவசரமாகவே அதைக் குடித்த தில்லுதுர, திருமபவும் பரபரப்புடன் அந்த அட்டென்டரை அழைத்தார்.

பக்கம் வந்த அட்டென்டரிடம் மறுபடி, "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

இன்னும் குழப்பமான அந்த அட்டென்டர், ஒன்றும் பேசாமல் திரும்பவும் தில்லுதுர கேட்டதையெல்லாம் கொண்டு வந்து டேபிளில் வைத்தார்.

அதையும் குடித்து முடித்துவிட்டு அந்த அட்டென்டரை அழைத்த தில்லுதுர, "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

கடுப்பாகிப் போன அட்டென்டர் ஆரடரைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, தில்லுதுரயைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டார்.

"சும்மா 'சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள'னு சொல்லறியே... சண்டை எப்பய்யா ஆரம்பிக்கப் போகுது.?".

அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருந்த தில்லுதுர, இப்போ அந்த அட்டென்டரைப் பார்த்து போதையாய் சிரித்தபடி சொன்னார்.

"இப்ப... நான் குடிச்சதுக்கெல்லாம் நீ பணம் கேட்ட உடனே...!" என்றார்.
.
.
.

7 comments:

Unknown said...

பில்லுக்கே இப்படின்னா...
டிப்ஸ்'க்கு எப்படியோ ?

சைக்கிள்காரன் said...

அற்புதம் தலைவா

சைக்கிள்காரன் said...

அற்புதம் தலைவா

maithriim said...

எப்படித்தான் உங்களுக்கு எல்லாம் இப்படி தோணுதோ? LOL Very nice :)
amas32

முத்தரசு said...

ஓசியில் குடிப்பது, அடிவாங்குவதுன்னா இப்படிதானா.

Unknown said...

Nangalam appave appidi! ipaa sollava venum..!

தாய்மனம் said...

இது போன்ற நல்ல திருப்பத்துடன் கதை எழுத உங்களுக்கு இயல்பா வருது

சரியா பயன் படுத்துங்க.

Post a Comment