Tuesday, November 2, 2010

சகிக்கமுடியாத மனைவி

தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் டாக்டரைப் பார்க்க அழைத்துப் போனார் தில்லுதுர.

சற்று கவனிக்க வேண்டிய நிலையில் தில்லுதுரயின் மனைவி இருந்ததால், டாக்டர் சிலபல செக்கப்களை செய்யச் சொன்னார்.

எல்லாவற்றையும் முடித்து வந்ததும் ரிப்போர்ட்களைப் பார்த்த டாக்டர், தில்லுதுரயிடம் அவர் மனைவியின் நிலை குறித்துக் கேட்டார்.

"என்ன உங்க வொய்ஃப் இப்படி இருக்காங்க..? பார்க்கவே சகிக்கலை...!".

டாக்டர் கேட்டதும், தில்லுதுர தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னார்.

"ஆமா டாக்டர். என்னாலயும்தான் சகிச்சுக்க முடியல. என்ன பண்ணறது..?  ஆனா, நல்லா சமைப்பா டாக்டர். அதுவுமில்லாம என் குழந்தைகளுக்கும் அவள்னா உயிரு...!" என்றார்.
.
.
.

4 comments:

சென்ஷி said...

அடக்கடவுளே! :))

Thangaraju Ramasamy said...

onnum puriyala. #

Anonymous said...

enna solla varinga

Unknown said...

என்ன புரியலை..?
டாக்டர் சொன்ன சகிக்கலையும் ஹீரோ சொன்ன சகிக்கலையும் வேற.. வேற..!

Post a Comment