Thursday, May 20, 2010

ட்ராபிக் சிக்னல்


பொள்ளாச்சியின் மிகப் பெரிய ஆர்த்தோ டாக்டரிடம் நான் கார் ட்ரைவராய் இருந்தபோது நடந்தது இது.

அவர் அப்போது ஹாஸ்பிடலை வாடகைக்கு இருந்ததிலிருந்து தனது சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தார்.

எல்லாம் முடிந்த கடைசியில், அவரது அலுவலக அறையிலிருந்த எலும்புகூட்டை நான் தான் பத்திரமாய் புது அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

அது பெரும் பாடாய்ப் போய்விட்டது.

அந்த எலும்புக்கூட்டை முன்சீட்டில் உடையாமல் உட்காரவைத்து வலது கையை எடுத்து சீட்டின் மேற்புறமாய் படரவிட்டு ஆடாமல் அசையாமல் ஓட்டிக்கொண்டு போனேன்.

'எலும்புகூடு கீழே விழுந்தால் என்ன ஆவது...?' என்று யோசித்துக் கொண்டே போகையில் சிக்னல் விழுந்துவிட்டது.

வண்டி நின்றதும் முன் கண்ணாடி வழியாய் எலும்புக்கூட்டைப் பார்த்த ட்ராபிக் கான்ஸ்டபிள் குழப்பத்துடன் வந்து ஜன்னல் கண்ணாடியை தட்டினார்.

"என்னது இது...?"

நான் ஏற்கனவே இருந்த குழப்பத்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல்,"டாக்டர் ஹாஸ்பிடலுக்கு கொண்டு வரச் சொன்னார்...!" என்று மட்டும் சொன்னேன்.

அதற்குள் ஒருவாறு நிலைமையை யூகித்திருந்த அந்த ட்ராபிக் கான்ஸ்டபிள் குறுஞ்சிரிப்புடன் சொன்னார்.

"ஆனா... எலும்புக்கூடு ஆகறவரைக்கும் வெயிட் பண்ணாம கொஞ்சம் முன்னாடியே கொண்டு போயிருக்கலாம்....!".
.
.

4 comments:

Deepa said...

Hilarious.

Venkat M said...

Nice joke... Enjoyed well.

அஸ்லம் கான் said...

:)))) Nice joke :)

நடராஜன் said...

"ஆனா... எலும்புக்கூடு ஆகறவரைக்கும் வெயிட் பண்ணாம கொஞ்சம் முன்னாடியே கொண்டு போயிருக்கலாம்....!".

Konnutinga

Post a Comment